வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

வெள்ளை மாளிகை முன்பு தமிழர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்


வெள்ளிக்கிழமை பிப்ரவரி 20 அன்று, தமிழீழத்தில்
இலங்கை அரசு நடத்திவரும் இனவழிப்பு தாக்குதல்களைக்
கண்டித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை
முன்பு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.



இந்த கவனயீர்ப்பு போரட்டத்தில் பல்லாயிரக்கணக்கான
மக்கள் கலந்துகொண்டனர்.

கனடா மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளில்
இருந்தும் மக்கள் இப்போராட்டதில் பங்கேற்றனர்.





இந்த நிகழ்வில் எதிர்க்குழுவாக சில இலங்கை சிங்களர்கள் சிலரும் மறுமுனையில் இருந்த்னர்.(என்ன, அவர்களை அருகில் சென்று படமெடுக்கத்தான் முடியவில்லை)

வியாழன், 5 பிப்ரவரி, 2009

பாம்புக்குத் தலை, மீனுக்கு வால் -- ‍ இன்போசிசின் நிலை.

Infosys தலைவர் முன்பு சத்யம் நிறுவன ஊழியர்களுக்கு சில அறிவுரைகளை சொன்னார்.

அதன்மீது வலையுலகில் இருவிதமான கருத்துகளில் விவாதக்கும்மி நடந்தது நாம் அறிந்ததே..

இவ்வேளையில்
"சத்யம் நிறுவன வாடிக்கையாளர்கள் சிலர் எங்களை தேடி வந்தனர். அவர்களாகவே வந்துள்ளனர். நாங்கள் யாரையும் அணுகவில்லை.

எங்கள் நிறுவனத்தின் நோக்கங்கள் மற்றும் திட்டத்துக்கு ஒத்து வரும் என்றால் அவர்களை எங்கள் வாடிக்கையாளர்களாக மாற்றி கொள்வோம்
"

என்ற செய்தியை அறிந்தபோது மேற்கண்ட எண்ணம் வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

ஏன், சத்யம் நிறுவனம் மீதும் அதன் தொழிலாளர்கள் மீதும் அக்கறை இருந்தால் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் ஏதும் சத்யம் நிறுவன வாடிக்கையாளர்கள் தங்களை அணுகுவதை தவிர்க்கவேண்டும் என்று
சொல்லவேண்டியதுதானே..